உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது.

சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் இப்பொழுது பற்றி பரவியுள்ளது இந்த கொடிய வைரஸ்.

ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சுழட்டி அடிக்கும் கொரோனா வைரஸிற்கு பிரபல பாடகர் ஒருவர் பாதிக்கப்பட்டு, உயிரிழந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. …

கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பிரபல பாடகர் ஜோ டிஃப்பி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

61 வயதாகும் ஜோ டிஃப்பிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தான் சாகும் கடைசி தருவாயில் கூட, “நான் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறேன். எனது குடும்பமும் நானும் தமிமையில் தான் உள்ளோம். எனது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் விழிப்புடன் இந்த நோயை எதிர்த்து போராட வேண்டும்” என்று முகநூலில் பதிவிட்டிருப்பது கண்ணீரை வரவழைக்கிறது.