தனுஷ்
தனுஷ்

துரை: நடிகர் தனுஷ் தங்களின் மகன் என திருப்புவனத்தை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு தனுஷுக்கு மேலூர் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கதிரேசன்
கதிரேசன்

சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக பணியாற்றுபவர் கதிரேசன். அவரது மனைவி மீனாட்சி. கடந்த 2002ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த தங்களின் மகன் கலையரசன் தங்களை பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்பதாகவும் கடந்த மூன்று வருடங்களாக தெரிவித்துவருகிறார்கள்.
மீனாட்சி
மீனாட்சி

இதை தனுஷும் அவரது தந்தை  கஸ்தூரி ராஜாவும் மறுத்தனர். இந்த நிலையில் கதிரேசன் இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தனுஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
கலையரசன்
கலையரசன்

தனுஷ் தங்களின் மகன் என்று கூறுவதால் கஸ்தூரி ராஜா குடும்பத்தார் தங்களை மிரட்டுவதாகவும் கதிரேசன் தெரிவித்துள்ளார்.