மாஸ்கோ:

ஷ்யாவில் கடந்த 18 ஆண்டுகளாக 30 பேரை கொலை செய்து நரமாமிசம் சாப்பிட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

தெற்கு ரஷ்யாவை சேர்ந்தவர் டிமிட்ரி பக்சேவ். இவரது மனைவி நடாலியா. இவர்கள் இருவரும் கடந்த 18 வருடங்களாக 30 பேரை கொன்று நரமாமிசம் சாப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது, மனித உடல் உறுப்புகள் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. ஃப்ரிட்ஜ், ஜார்களிலும் இருந்து உறுப்புகளை போலீசார் மீட்டனர். இறந்தவர்களின் உடல் உறுப்புகளுடன் செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.