டிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் ஷோயிக் சக்ரவர்த்தியின் ஜாமீன் மனுவை மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
சுஷாந்த் தற்கொலை வழக்கு போதை மருந்து விவகாரம் வரை நீண்டுள்ளது. இதில் சுசுஷாந்துக்கு போதை மருந்து கொடுத்ததுடன் அது சம்பந்தப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நடிகை ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ரியா ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதேபோல் அவருக்கு உதவியாக இருந்த தம்பி ஷோயிக் சக்ரவர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா, தீபேஷ் சாவந்த், ஜைத் விலாட்ரா, பசித் பரிஹார் ஆகியோரும் மும்பை செஷன்ஸ் கோர்ட்டில்  ஜாமீன் மனு தக்கல் செய்திருந்தனர்/ அந்த மனுக்கள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ரியா செப்டம்பர் 22 வரை மும்பையின் பைகுல்லா சிறையில் தொடர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அடுத்த வாரம் ரியா முடிவு செய்வார் என்று அவடது வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டேகூறினார்.