ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பலர் பணத்தை இழப்பதுடன், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செல்போன் ஆப் விளம்பரத்தில் நடித்த விராட் கோலி மற்றும் தமன்னா மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த பிப்ரவரி மாதம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது ஏன் என கேள்வி எழுப்பி உயர்நீதிமன்ற கிளை விராட் கோலி மற்றும் தமன்னாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது குறித்து விளக்கமளிக்க மத்திய மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.