புது டெல்லி:
கொரோனா பாதிப்புக்குள்ளான வழக்கறிஞர் ஒருவர், படுக்கைக்காக காத்திருந்ததால் தனது தாத்தாவை இழந்து விட்டதாகவும், இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.


இதுகுறித்து அவர் தொடர்ந்துள்ள வழக்கில், இரவு முழுவதும் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் வாயிலுக்கு வெளியே படுக்கைக்காகக் காத்திருந்தபோது, அவரது தாத்தா காலமானார் என்று அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மருத்துவமனைகள் மற்றும் மாநில அதிகாரிகளின் கண்டனமற்ற செயல்கள் காரணமாக, அவர் தனது 86 வயது தாத்தாவை சமீபத்தில் இழந்தார் என்று வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். எந்தவொரு முதலுதவி இல்லாததாலும், பின்னர் எந்த மருத்துவமனைகளிலும் அனுமதிக்க மறுத்ததாலும் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது விண்ணப்பதாரர் மற்றும் அவரது முழு குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இதில் 86 வயதான தாத்தா உட்பட, வைரஸுடன் போராடி உயிரை இழந்தார். அவர் ஒரு அரசு மருத்துவமனைக்கு வெளியே அலட்சியமாக சிக்கி அதிகாரிகளால் தவறாக கையாளப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவமனைகள் விண்ணப்பதாரரின் தாத்தாவுக்கு படுக்கை வழங்குவதில் தாமதமாகி விட்டதாகவும், அவருக்கு முதலுதவி அளிப்பதில் அலட்சியமாக இருந்ததாகவும், அவருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார். மேலும், அவர் அதிக காய்ச்சலுடன் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் கட்டிடத்திற்கு வெளியே கவனிக்கப்படாமல் கிடந்தார். மோசமான நிலையில் இருந்த அந்த மருத்துவமனை, நோய் பாதிப்புக்குள்ளான அவருக்கு பாராசிட்டமால் காப்ஸ்யூல் கூட வழங்கப்படவில்லை என்பதிலிருந்து, அவர்கள் எந்த அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ளனர் என்று தெளிவாக தெரிவாதாகவும் அந்த வழக்கறிஞர் உயர் நீதிமன்றதில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகள், எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல், அறிகுறியற்ற நோயாளிகளுக்கு கூட சோதனைகளை மறுக்கின்றன என்றும், தாமதமான செயல்முறை மற்றும் தொழில்நுட்ப ஆன்லைன் நடைமுறைகள் காரணமாக, ஒரு புகழ்பெற்ற தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்வது முற்றிலும் சாத்தியமற்றது என்றும் வழக்கறிஞர் கூறினார்.

“விண்ணப்பதாரரின் 86 வயதான தாத்தா பரிசோதனை செய்ய ஆர்.எம்.எல் மருத்துவமனைக்குச் சென்றபோது, அலட்சியமாக நடத்தப்பட்டார். நோயாளிகளுக்கு இடமளிக்க அந்த மருத்துவமனையில் உள்கட்டமைப்பு இல்லை. அதிக காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஒரு பாராசிட்டமால் காப்ஸ்யூல் கூட வழங்கப்படவில்லை”என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

“மருத்துவமனையின் கடுமையான அலட்சியம் மற்றும் மாநில அதிகாரிகள் இந்த நாட்டிற்கு சேவை செய்த ஓய்வுபெற்ற மூத்த குடிமகனுக்கு உதவுவதில் அரசு எவ்வாறு தோல்வியுற்றது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி சித்தரிக்கிறது” என்று அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.