டெல்லி: 54 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஓஎன்ஜிசியானது, தற்காலிகமாக இரண்டு துளையிடும் பணிகளில் நடவடிக்கைகளை நிறுத்தியது.

54 ஊழியர்கள் கொரோனா அறிகுறிகள் இருந்ததோடு ஒருவர் இறந்து விட்டார். ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இரண்டு ரிக்குகளில் வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 34 ரிக்குகள் அனைத்து COVID-19 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடல்வழியில் இயங்குகின்றன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முறையான வழிகாட்டுதல்கள் இல்லாததாலோ அல்லது நிறுவனம் விதிகளை கடைபிடிக்காததாலோ தொற்று பரவியதாக இரண்டு ஓ.என்.ஜி.சி ஊழியர் அமைப்புகள் கடிதம் எழுதி உள்ளன. ஆனால் ஓஎன்ஜிசி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையையும் அந் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அனைத்து வெளிநாட்டு மற்றும் கடலோர நிறுவல்களிலும், அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட பிற வேலை இடங்களிலும் கோவிட் 19ன் பரவலைக் கட்டுப்படுத்த விரிவான அறிவுரைகள் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டன என்று கூறி உள்ளது. கோவிட் தொற்று இல்லாத நோயாளிகள் தான் கடல்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.