இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் , ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓரிரு நாட்கள் சிகிச்சை பெற முயன்ற அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் .


உடல்நலனை பற்றி தனது இன்ஸ்டாகிராமில் “நானும் எனது அணியும் செட்டில் மிகவும் பாதுகாப்பாக இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமாக கடந்த வாரம் லேசான காய்ச்சலுக்கு ஆளானேன். கட்டாய சோதனைகளை மேற்கொண்ட பிறகு, நான் COVID-19 நேர்மறை என கண்டறியப்பட்டேன். உடல்நல பாதிப்புகளைத் தணிக்க ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் என்னை அனுமதித்தேன், நிபுணர் மருத்துவ நிபுணர்களின் பராமரிப்பில் இருந்தபின் நான் இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன் .
உலகெங்கிலும் உள்ள பலரை துன்பப்படுத்தும் இந்த உடல்நல அபாயத்திலிருந்து நான் முழுமையாக குணமடைவேன் என்று நான் நம்புகிறேன். இப்போதைக்கு, நான் அறிவுறுத்தியபடி சுயமாக தனிமைப்படுத்தப்படுவேன். அனைவருக்கும் நன்றி .பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், நன்றாக இருங்கள்! ” என பதிவிட்டுள்ளார் .