டெல்லி: டெல்லியில் உச்சக்கட்டத்தில் கொரோனா 3வது அலை வீசுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்து உள்ளார்.

தலைநகர் டெல்லியில் கொரோனாவின் 3வது அலை பரவி வருகிறது. நாள்தோறும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந் நிலையில், தொற்று பரவல் விரைவில் குறையும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது: டெல்லியில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று மூன்றாவது முறையாக பரவத் தொடங்கியுள்ளது. 3வது முறையாக அதிகரித்து வரும் தொற்று விரைவில் குறையும்.

அதற்காக அரசு சார்பில் பரிசோதனைகள் அதிகரிக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளன. தளர்வுகள் காரணமாகவும், பண்டிகை காலத்தையொட்டி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதே தொற்று பரவ காரணம்.

கடைவீதிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.