மும்பை: கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.

தேசிய அளவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. பாதிப்புகளுடன் உயிர்பலிகளுடன் முதலிடத்தில் இந்த மாநிலம் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

மாநில சட்டமன்ற வணிக ஆலோசனைக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர் கூறியதாவது: இப்போது நாம் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் சொந்த நலனுக்காக கொரோனா வைரஸ் தொடர்பான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் மக்கள் கவனிப்பார்கள். ஏனெனில் அது அவர்களின் நலனைக் கவனித்து வருகிறது.

அத்யாவசிய சேவை கடமையில் உள்ளவர்கள் பயணிக்க அனுமதிக்க மும்பையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன என்றார்.

முன்னதாக திட்டமிடப்பட்ட ஜூன் 22 க்கு பதிலாக ஆகஸ்ட் 3 முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் என்று தாக்கரே கூறி இருந்தார். மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை 90,000ஐ தாண்டி உள்ளது.