லண்டன்:  உலக நாடுகளை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி இன்னும் 3 மாதத்தில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து தெரிவித்து உள்ளது.

உலகை  மக்களை கடுமையான தொல்லைக்கு உட்படுத்தி உள்ள  கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த உலக நாடுகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.  இங்கிலாந்து நாட்டிலும், உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகா  என்ற பெயரில் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இதை மனிதர்களுக்கு சோதனை நடத்தி வருகிறது. ஏற்கனவே முதல் மற்றும் 2வது கட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளன. 2வது கட்ட சோதனையின்போது பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறி சோதனை நிறுத்தப்பட்டது. தற்போது, அவை சரி செய்யப்பட்ட நிலையில் 3வது கட்ட சோதனையை தொடங்கி உள்ளது.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அமெரிக்கா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் 3 ஆம் கட்டம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute) நிறுவனத்துடன் இணைந்து 2 மற்றும் 3 கட்டம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், அடுத்த 3 மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்து உள்ளது. குழந்தைகளை தவிர்த்து மற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்ட இருப்பதாகவும்,  ஏற்கனவே கணிக்கப்பட்டதைவிட விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
ஆனால்,  ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கட்டுப்பாட்டாளர்கள் பணிபுரியும் விஞ்ஞானிகள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சாத்தியமான COVID-19 தடுப்பூசி பற்றிய தரவுகளை மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.