சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு சளியின் தாக்கம் அதிகமானதால் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாச கருவி பொறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் கூறினர்.