1959-ஆம் ஆண்டு வெளியான படம் வீரபாண்டிய கட்ட பொம்மன். பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற எதற்கு கட்ட வேண்டும் கிஸ்தி என்ற டயலாக் பெரும் பிரபலமானது.

இப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்திருந்தவர் பழம் பெரும் நடிகர் சி.ஆர். பார்த்திபன். ஹீரோவுக்கு நிகரான இந்த வில்லன் பாத்திரம் அந்த காலத்திலே பேசப்பட்டது.

வேலூரை சேர்ந்த, சி.ஆர்.பார்த்திபன் கிட்டத்தட்ட 120 படங்களில் நடித்திருக்கிறார். ராஜாஜி, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் என ஐந்து முதல்வர்களுடன் தொடர்பில் இருந்த நடிகராகத் திகழ்ந்தார்.

இந்நிலையில் பழம் பெரும் நடிகர் சிஆர் பார்த்திபன் நேற்று இரவு காலமானார். 90 வயதான சிஆர் பார்த்திபன் வயது முதிர்வு பிரச்சனைகளால் உயிர் நீத்துள்ளார்.