டில்லி,

த்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்..

இந்த ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடரும்?  பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரும் நேற்று தொடங்கியது. இதையொட்டி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.

அதையடுத்த வெளியே வந்த ராகுல்காந்தி செய்தியாளர்களிம் கூறியதாவது,

இந்தியாவில் அவரவர் திறமைக்கேற்ப இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. நமது நாட்டின் நாட்டின் முக்கியப் பிரச்சினையே வேலையில்லா திண்டாட்டம்தான்.

மோடி தலைமையிலான மத்திய அரசு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.