டில்லி:

இந்திய கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளில் 158 போட்டிகளில் விளையாடும் என பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பி.சி.சி.ஐ. பொதுக்கூழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய அணியின் எதிர்கால சுற்றுப் பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 5 ஆண்டுகளில் 158 போட்டிகளில் விளையாடும் அட்டவணை தாயாராகியுள்ளது. இதில் 81 போட்டிகள் இந்தியாவில் நடக்கிறது.

இந்த கால அட்டவணையில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடம்பெற்று உள்ளன. ஆப்கானிஸ்தான் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாடுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியுள்ளது.