ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் வார்னரின் குழந்தைகள் படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியா –  ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி சென்னையிலும், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தாவிலும் நடைபெற்றது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற முன்னிலையில்  இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர், இன்ஸ்டிராகிராம் தளத்தில் பதிவேற்றிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.  இந்த புகைப்படம் குறித்து வார்னர் தெரிவித்துள்ளதாவது:

“என்னுடன் என் குழந்தைகளும் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் சென்னையை மிகவும் ரசித்தார்கள்.   அதுமட்டுமின்றி அடம் பிடித்து காரை நிறுத்தச் சொல்லி,  எலுமிச்சை ஜூஸ் வாங்கிக்  குடித்தனர்” எந்று வார்னர்  பதிவிட்டுள்ளார்.