தரம்சாலா:

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இமாச்சல் தலைநகர் தரம்சாலாவில் நாளை நடக்கிறது.

இதுல் இந்திய அணியின் கேதர் ஜாதவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தொடரில் இருந்து விலகினார். இவருக்குப்பதில் தமிழகத்தின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர் இலங்கை அணிக்கு எதிராக 20ம் தேதி துவங்கும் 20:-20 தொடரிலும் ஏற்கனவே இடம்பெற்றிருந்தார்.