சென்னை: உலகக்கோப்பை(2019) இந்திய அணியில் விளையாடிய ஆல்-ரவுண்டர் தமிழ்நாட்டின் விஜய் சங்கருக்கு(29) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு, இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் அறிமுகமானவர் இந்த விஜய் சங்கர். யாரும் எதிர்பாராமல், இவருக்கு 2019 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்தாலும், இவர் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

அதன்பிறகு தேசிய அணியில் இவருக்கு வாய்ப்பு அமையவில்லை. தற்போது ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் தேர்வாகியுள்ளார்.

இவருக்கு, வைஷாலி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அதுதொடர்பான படங்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இவருக்கு, கே.எல்.ராகுல், சாஹல் மற்றும் ஸ்ரேயாஸ் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.