பிரபல கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது முறையாக தந்தையாகி உள்ளார்.

போர்ச்சுகீசிய பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ. இவர் திருமணமாகாமலேயே குழந்தை பெற்று வருகிறார். வாடகை தாய் மற்றும் காதலி மூலம் ஏற்கனவே 3 மூன்று குழந்தைகளை பெற்றுள்ள அவர், மேலும் குழந்தைகள் பெற விரும்புவதாக கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியபோது,  தனது மூத்த மகன், தனக்கு  மேலும் தம்பி, தங்கைகள் வேண்டும் என்று அடம்பிடிப்பதாக  கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

 

இந்நிலையில், அவரது மூத்த மகன் கிறிஸ்டியானோ, தனது தந்தையின் லக்கி நம்பரான,  ஜெர்சியில் எழுதப்பட்டுள்ள  எண்ணுக்கு பொருத்தமாக வீட்டில் 7 சகோதர- சகோதரிகள் வேண்டுமென்று ஆசைப்படுவதாகவும், அவர்களின் ஆசையையை விரைவில் பூர்த்தி செய்ய தான் விரும்புவதாகவும் ரொனால்டோ கூறி இருந்தார்.

அதேபோல் தற்போது, தனது ரோட்ரிகஸ் என்ற  ஜார்ஜினியா  காதலி மூலம் 4வது குழந்தைக்கு தந்தையாகி உள்ளார்.

இந்தக் குழந்தைக்கு அலனா மார்டினா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.

தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.