டெல்லி: பெருமுதலாளிகளே பிரதமர் மோடியின் சிறந்த நண்பர்கள் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டம் 20 நாட்களாக நீடிக்கிறது. மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் காணப்படவில்லை.  இதையடுத்து, பெரு நிறுவனங்களான அம்பானி மற்றும் அதானி தயாரிப்புகளை புறக்கணிப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந் நிலையில், பெருமுதலாளிகளே பிரதமர் மோடியின் சிறந்த நண்பர்கள் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

கருத்து வேறுபாடு கொண்ட மாணவர்கள் தேச விரோதிகள். சம்பந்தப்பட்ட குடிமக்கள் நகர்ப்புற நக்சல்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா தொற்றை பரப்புவர்கள்.

நாட்டில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள் யாரும் இல்லை. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலிஸ்தானியர்கள். பெருமுதலாளிகளே பிரதமர் மோடியின் சிறந்த நண்பர்கள் என்று கூறி உள்ளார்.