டில்லி:

டைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஒப்புகை சீட்டு எந்திரம் (விவிபாட்) மூலம் வாக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.


நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்துடன், விவிபாட் எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரமும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தங்களது வாக்குப்பதிவை வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ள முடியும்.

ஆனால், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு ஒப்புகை சீட்டு எந்திரம் மட்டுமே பதிவான வாக்குகளை சரிபார்க்க பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் கோரி 21 அரசியல் சார்பில் கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன. அதில், பதிவாகும் 50 சதவீதம் வாக்குகளை ஒப்புகை சீட்டுகள் மூலம் சரிபாக்க கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு  வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஒப்புகை சீட்டு எந்திரங்கள் மூலம் வாக்குகளை சரிபார்ப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.