சர்வதேச அலவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

இந்த வருடத்தின்  2வது பாதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று சவுதி அரேபிய அமைச்சர் காலில் அல் ஃபலே தெரிவித்துள்ளார்.

அதே போல, கச்சா எண்ணெய் உற்பத்தியை எந்த அளவுக்கு உயர்த்துவது என்பது குறித்து ஓபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகளுடன் அடுத்த மாதம் விவாதிக்கப்படும் என ரஷ்ய அமைச்சர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்துள்ளார்.

இவர்களது அறிவிப்புக்குப் பிறகு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வருடம்  60 டாலருக்கு கீழ் குறைந்ததால் எண்ணெய் வள நாடுகள் அதன் உற்பத்தியை குறைத்தன. இதனால் விலை 80 டாலரை கடந்துவிட்டது. இந்த நிலையில் உற்பத்திக் கட்டுப்பாட்டை தளர்த்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து தெரிவித்துள்ளன. இதனால் 3 சதவிகிதம் விலை குறைந்துள்ளது. மேலும்  விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.