துபாய்: வரும் செப்டம்பர் 19 அன்று துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே, ஆர்சிபி உள்ளிட்ட அணியினர் அமீரகம் சென்றடைந்தனர்.

இத்தொடருக்காக, தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியினர், ஏற்கனவே சென்னையில் 6 நாட்கள்(ஆகஸ்ட் 15 – 20 வரை) பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

இந்நிலையில், கொரோனா பரிசோதனையில் அனைவரும் தேறியதையடுத்து, சென்னையிலிருந்து துபாய் புறப்பட்டுச் சென்றனர். அங்கு தாஜ் துபாய் என்ற ஹோட்டலில் தங்குகின்றனர். சென்னை வீரர்களுக்காக ஒரு தளம் முழுவதும் அங்கே ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேபோல், விராத் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியினரும் துபாய் வந்தடைந்தனர். ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியினர் அபுதாபி வந்தடைந்தனர்.

ஐபிஎல் அணி வீரர்கள் அனைவரும், அமீரகத்தில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 2 முறைகள் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் தேறும்பட்சத்தில், அனைவரும் உயர்மட்ட பாதுகாப்பு வளைத்தில் வருவர் என்று கூறப்பட்டுள்ளது.