மும்பை: நடந்து முடிந்த ஐபிஎல் 2020 தொடரில், சென்னை அணியைப் பற்றித்தான் அதிகமுறை டிவீட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமீரகத்தில் நடைபெற்ற இந்த சீசன், 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, ஒரு மோசமான சீசன். முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் வெளியேறியதோடு, புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்தது சென்னை அணி.

நிலைமை இப்படியிருந்தாலும், சென்னை அணியைப் பற்றித்தான் அதிகமுறை டிவீட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னை அணிக்கு அடுத்து, அதிக கவனத்தைப் பெற்ற அணியாக பெங்களூரு அணி திகழ்கிறது.

பிறகு, மூன்றாவது இடத்தில் மும்பை அணியும், நான்காமிடத்தில் ஐதராபாத் அணியும், ஐந்தாமிடத்தில் கொல்கத்தா அணியும் உள்ளன.

ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள், முறையே ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.