கடலூர்:

தேமுதிக கடலூர் மாவட்ட செயலாளர் மகன் சாலை விபத்தில் பலியானார்.

பண்ருட்டி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் கடலூர் மாவட்ட தேமுதிக செயலாளருமான சிவக்கொழுந்துவின் மகன் ஜெசி(என்கிற)ஜெசியேந்திரன் (வயது 27).

காடம்புலியூர் அருகே இரு சக்கர வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெசியேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.