கடலூர்:
டலூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. இன்று ஒரே நாளில் 214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது.  சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 413 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வரை 28 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தனர். மீத 384 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் இன்று   214 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும்  கோயம்பேடு மார்க்கெட் மூலம் தொடர்புடையவர்கள்  என்று கூறப்படுகிறது.
இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள  214 பேரில்,  146 பேர் காலையிலும், 68 பேர் மாலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.