புது டெல்லி:

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் சமூக விலகலை மீறுவது தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

பாட்னா:

பாட்னாவில் உள்ள மிதாபூர் காய்கறி சந்தையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து மக்கள் சமூக விலகல் விதிமுறைகளை மீறுவதைக் காண முடிந்தது . இந்தியா முழுவதும் மொத்தம் 3072 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 75 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் 30 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஹரிதுவார்:

ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக ஹரித்வாரில் உள்ள மலர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர் . இதுகுறித்து விவசாயி அமித் சவுகான் தெரிவிக்கையில், “தேவை இல்லாமல் நாங்கள் இழப்புகளைச் சந்திக்கிறோம் என்றும், தங்களுக்கு வருமானம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். எங்கள் தாவரங்களை காப்பாற்றுவதற்காக நாங்கள் பூக்களை பறிக்க வேண்டிய நிலையில், பூக்களை தூக்கி எறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர்:

ஸ்ரீநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் 300 க்கும் மேற்பட்ட தொடர்புகள் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.