சென்னை:

ன்று மாலை நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில்,  ஊரடங்கை இந்த மாதம் 30ந்தேதி வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு வரும் 14ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், அதை மேலும் நீட்டிக்க சுகாதாரத்துறையினர், மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதில், ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு வரும் 30ந்தேதி நீட்டிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.