அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம்தான் என சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் கமல் பேசிய பேச்சுக்கு இந்துத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளன .

இந்நிலையில் தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பதிவில் “அறிவாளி போல் காட்டிகொண்டாலும் அவரும் அரசியல்வாதி தானே … ஓட்டுண்ணா எல்லாம் அப்படி தான் விட்டுட்டு வேலையை பாருங்கப்பா.” என்று கமலை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.