கோல்டுகோஸ்ட்:

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இன்று 9வது நாளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்று வரும்  25 மீட்டர் ரேபிட் பயர்  துப்பாக்கி சுடுதல் போட்டியில் அனிஷ்  தங்கம் வென்றுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் தங்க வேட்டை தொடர்ந்து வருகிறது.

இன்றைய போட்டியின்போது  50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவந்த் தங்கம் வென்றுள்ள நிலையில், தற்போது ஆண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அனிஷ் தங்கம் வென்றுள்ளார்.

15வயதே ஆன அனிஷ் பன்வாலா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருப்பது ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதுவரை இந்தியா 16 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களை பெற்று 3வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.