சென்னை:

ஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று முடிந்த விளையாட்டி போட்டிகளில் இந்தியா 66 பதக்கங்களை  பெற்று நாடு திரும்பி உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் பதக்கங்களை பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு பரிசு தொகை மற்றும் வாழ்த்துக்களையும் தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

காமன்வெல்த் போன்ற சர்வதேசப் போட்டிகளில் தங்கம் வெல்வோருக்கு ரூ.50 இலட்சமும், வெள்ளிப் பதக்கம் பெறுவோருக்கு ரூ.30 இலட்சமும், வெண்கலம் பெறுவோருக்கு ரூ.20 இலட்சமும் வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதையே பின்பற்றி பரிசுத்தொகைகள் வழங்கப்படுவதாக[வம், மேலும் பல வெற்றி களைக்  குவித்து நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும்  முதல்வர் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே,  காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ள நிலையில் மற்ற வீரர்களுக்கான பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கலப்பு இரட்டையர் மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற  டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படுவதாகவும்,

மற்றொரு டேபிள் டென்னிஸ் வீரர்  வீரர் சரத்கமல் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலமும் பெற்றுள்ளதால், அவருக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா கார்த்திக் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளியும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் (2 வெள்ளிப் பதக்கம்) பெற்றுள்ளதால், அவருக்கு ரூ.60 லட்சம் பெற தகுதி பெற்றுள்ளதாகவும்,   மற்றொரு ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று ரூ.30 லட்சமும், இன்னொரு ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்று ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை  வழங்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில்   தனித்தனியே வாழ்த்துக் கடிதங்களும் அனுப்பப்பட்டு உள்ளது.