மும்பை: கொரோனா காலத்தில், பொதுப் போக்குவரத்து முடங்கியதால், மக்களில் பலரின் கவனம் சைக்கிளை நோக்கித் திரும்பியதால், சைக்கிள் விற்பனை அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதாரண மக்களால் எளிதில் வாங்க முடிந்த வாகனம் சைக்கிள் மட்டுமே. கொரோனா போக்குவரத்து முடக்கத்தால் சைக்கிளின் விற்பனை கடந்த 5 மாதங்களில் அதிகரித்தது.
அதாவது, சைக்கிள் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்ததாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது; பல நக­ரங்­களில், மக்­கள் அவர்­கள் விருப்பத்­திற்­கேற்ற சைக்­கிளை வாங்குவதற்­காக காத்­தி­ருப்­ப­தாக தயாரிப்பு நிறு­வ­னங்­கள் தெரி­விக்­கின்றன. இதுபோன்ற நிலை, நாட்­டில் இப்போதுதான் முதன்முறை­யாக உரு­வாகி இருப்­ப­தா­க­வும் அவை தெரி­விக்­கின்றன.
கடந்த மே முதல் செப்­டம்­பர் வரை­யி­லான 5 மாத காலத்­தில், விற்­பனையானது 41.81 லட்­ச­மாக உயர்ந்­தி­ருப்­ப­தாக அகில இந்­திய சைக்­கிள் தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கம் தெரி­வித்­துள்­ளது. கடந்த மே மாதத்­தில், சைக்கிள் விற்­பனை 4.57 லட்­ச­மாக இருந்த நிலை­யில், ஜூன் மாதத்­தில் இரு மடங்கு உயர்ந்து 8.51 லட்­ச­மாக அதி­க­ரித்­தது.  செப்­டம்­பர் மாதத்­தில் மட்­டும் 11.22 லட்­சம் சைக்­கிள்­கள் விற்­பனை ஆகி­யி­ருக்கின்றன.
கடந்த, 5 மாதங்­களில், சைக்­கிள் விற்­பனை கிட்­டத்­தட்ட 100% அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது. பல இடங்­களில் மக்­கள் முன்­ப­திவு செய்து காத்­தி­ருக்­கி­றார்­கள். அனே­க­மாக இந்த அள­விற்கு சைக்கிளின் தேவை அதிக­ரித்­தி­ருப்­பது வர­லாற்­றில் முதல் முறை­யாக இருக்­கலாம் என்று கூறப்பட்டுள்ளது.