சென்னை:
தென்கிழக்கு வங்க கடலில்  “அம்பான்” புயல் நாளை உருவாகும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் கடலில் சூறாவளி காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

கடந்த 13ந்தேதி சென்னை வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 16 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் புயல் உருவாவதை உறுதி செய்துள்ள வானிலை மையம், அதற்கு ஆம்பன் புயல் என்று பெயரிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உளளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளத. இது நாளை புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
இந்த அம்பான்’ புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
17-ஆம் தேதி வரை வடமேற்கு திசையிலும் , அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் அம்பான்’ புயல் நகர வாய்ப்பு உள்ளது.
18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மணிக்கு 75-85 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
ஆம்பன் புயலால் கேரள , கர்நாடகா மாநிலங்களில் காற்றின்  ஈர்ப்பு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த சமயத்தில் தெற்கு  வங்க கடல் மற்றும் வடக்கு வங்கக்  கடல்  உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.