ங்கக்கடலில் உருவான அம்பான் புயல் இன்று மாலை மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் அருகே கரையைக் கடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை கொட்டோ கொட்டென்று கொட்டி வரும் நிலையில், பலத்த சூறாவளி காற்றும் வீசி வருகிறது. கடற்கரை பகுதிகளை துவம்சம் செய்து வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பான் புயல் தற்போது  வலுவிழந்து மேற்கு வங்கத்தில் கரையை கடக்க தயாராகி வருகிறது.  இன்று பிற்பகல் 4 மணி முதல் 6 மணிக்குள் வங்காளதேசத்தின்  ஹதியாவைக் கடக்கும்ம் என்றும், அப்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில்  சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது, ஒடிசாவின் பரதிப் நகரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த  அம்பான் புயல், மணிக்கு 18- முதல் 19 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இதனால், மணிக்கு 102 கி.மீட்டர் வேகத்தில் தற்போது சூறைக்காற்று வீசி வருகிறது. அடுத்த 6 முதல் 8 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஒடிசாவில் 1.3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக  சுமார் 3 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.  நாளை காலை வரை கொல்கத்தாவுக்கு சிறப்பு விமானங்கள் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புயலின் தாக்கம் காரணமாக  ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளில், கடல் கொந்தளிப் புடன் காணப்படுகிறது. ஒடிசாவின் பரதிப் மற்றும்  மேற்கு வங்காளத்தில் பர்கனாஸ் உள்பட பல மாவட்டங்களில் காலை முதலே கனமழை கொட்டி வருகிறது.
புயல் காரணமாக 4 முதல் 5 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி பயமுறுத்தி வருகின்றன.  சூறைக்காற்று  ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் உடைந்து விழுந்துள்ளதாகவும், வீட்டின் கூரைகள் காற்றில் பறந்துள்ளதாகவும், சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகி வருகின்றன.