‘பட்டாஸ்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றை முடித்துவிட்டார் தனுஷ்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படம், தனுஷ் நடிப்பில் உருவாகும் 41-வது படமாகும்.

இதனைத் தொடர்ந்து 42-வது படத்தை செல்வராகவனும், 43-வது படத்தை ராம்குமாரும் இயக்கவுள்ளனர்.

இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 44-வது படத்தை தயாரிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

இப்படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் தனுஷ். இந்த நிலையில் இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது .