டெல்லி: 2020ம் ஆண்டு ஜனவரி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் முதல் தேதியன்று அகவிலைப்படியை உயர்த்துகிறது. இதன்படி கடந்த 2020 ஜனவரியில் அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்தியது.

பின்னர் கொரோனா காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் முடக்கியது. கடந்த ஜூலை மாதத்தில் அகவிலைப்படி அதிகரிக்கப்படவில்லை. பழைய விகிதத்தில் அகவிலைப்படியை வழங்கி வந்த நிலையில், தற்போது நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந் நிலையில் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2020ம் ஆண்டு ஜனவரி முதல் கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுகிறது.