தமிழகத்துக்கு தினசரி 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி: அமைச்சர் தங்கமணி
சென்னை:
தமிழகத்திற்கு தினசரி 72ஆயிரம் டன் நிலக்கரி தர மத்தியஅரசு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், இதன் காரணமாக மின்வெட்டு வர சாத்தியமில்லை என்று அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.
தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலைய பராமரிப்பு பணி மற்றும் அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சில அனல் மின்நிலையங்களில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில்மின்வெட்டு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தற்கு தேவையான நிலக்கரி இறக்குமதிக்கு அனுமதிக்க கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதைத்தொடர்ந்து தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டில்லி சென்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு தினந்தோறும், 72 ஆயிரம் டன் நிலக்கரி தர மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி, அனல் மின்நிலையங்களில் எப்போதுமே 15 நாட்க ளுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைத்திருப்போம். கடந்த வாரம் ஒடிசாவில் மழை பெய்ததால் நிலக்கரியைகொண்டுவருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் நிலக்கரி கையிருப்பு குறைந்து விட்டது.
தற்போது வடசென்னை அனல்மின்நிலையத்தில் 3 நாட்களுக்கும், தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 6 நாட்களுக்கும்தேவையான நிலக்கரி இருக்கிறது.
தற்போது அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து நிலக்கரி வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறேன். அதைத்தொடர்ந்து 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசுக்கு மத்தியஅரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் நாள் தோறும் 72 ஆயிரம் டன் நிலக்கரியை நாள்தோறும் தமிழகத்துக்கு அனுப்புவதாகவும் அமைச்சர் கோயல் ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் கூறினார்.
இதன் காரணமாக தமிழகத்தில் மினவெட்டுக்கே வாய்ப்பில்லை என கூறினார்.