ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிடுவது யார்? என்று விசாரிக்கையில் அக்கல்லூரி மாணவர்கள் சிலர், தங்களது செல்போனில் போட்டோ எடுத்து வெளியிடுவது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டது படக்குழு .

இதை அறிந்து ஆத்திரமடைந்த மாணவர்கள் படப்பிடிப்பு நடக்கும் போது தொடர்ந்து கற்களை வீச படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டுள்ளனர் .

தற்போது படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்திருக்கும் ‘தர்பார்’ குழு, அதற்கான லொக்கேஷன்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.