மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைப்பெற்ற கூர்காலாந்து போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஒரு போலீசார் பலியானார். பலர் படுகாயமடைந்தனர்.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் அதிகளவிளான கூர்க்கா இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கூர்காலாந்து என்ற தனி மாநில வேண்டும் என்றும், வங்க மொழி திணிப்பை ஏதிர்த்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த 8-ம் தேதி துவங்கப்பட்ட இந்த போரட்டத்தில் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பை சேர்ந்தவர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஜன முக்தி மோர்ச்சா அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது.

 

இந்த வன்முறையில் போலீசார் வாகனங்கள் தாக்கப்பட்டன. மேலும் ரிசர்வ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கிரண் தமாங் என்ற போலீஸ் பலியானார். பலர் படுகாயமைடைந்தனர். இதனையடுத்து டார்ஜிலிங்கில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங்கில் நடைப்பெற்று வரும் போராட்டத்தினால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.