சென்னை:

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான, 12(3) ஊதிய ஒப்பந்தமானது, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணியாளர்களின் ஊதியம்,அகவிலைப்படி,இதரப்படிகள் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரசு போக்குவரத்துத்துறையின் சார்பில் 14 ஆவது 12(3) ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள நிர்வாகத் தரப்பிலான குழு அமைக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் 14 ஆவது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கங்களினிடையே வருகின்ற 20-03-2020 அன்று காலை 10 மணிக்கு குரோம்பேட்டை மாநகர் பயிற்சி மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து,  சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 12(3) ஊதிய ஒப்பந்தமானது ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊதிய ஒப்பந்தத்தில் பணியாளர்களின் ஊதியம் அகவிலைப்படி இதர படிகள் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரசு போக்குவரத்து துறையின் சார்பில் 14-வது 12(3) ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள நிர்வாகத் தரப்பிலான குழு அமைக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 14-வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையானது நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் இடையே வருகின்ற 20-ந்தேதி காலை 10 மணிக்கு குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.