சென்னை: பொறியியல் முதல் மற்றும் 2ம் பருவ தேர்வுகளுக்கான தேதிகள் குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா லாக் டவுனால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 9 மாதங்களுக்குப் பிறகு நவம்பர் மாதம் திறக்கப்பட்டன. முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இணைய வழியிலும் அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே அவர்களுக்கான பாடங்கள், தேர்வு குறித்த அட்டவணையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.  அதன்படி பொறியியல் முழு நேர படிப்பில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் பருவ பாடங்களை பிப்ரவரி 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அவர்களுக்கான செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 26ம் தேதி தொடங்கும். மார்ச் 8ம் தேதி முதல் எழுத்து தேர்வுகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பகுதி நேர பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 3ம் தேதிக்குள் பாடங்களை முடிக்க வேண்டும்.

மார்ச் 5 முதல் 15ம் தேதி வரை செய்முறை தேர்வுகளும், ஏப்ரல் 5ம் தேதி எழுத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கூறி உள்ளது.