சென்னை: பெங்களூரு அணிக்கெதிராக 150 ரன்கள் என்ற எளிய இலக்க‍ை நோக்கி ஆடிவரும் ஐதராபாத் அணியில், கேப்டன் வார்னர், அரைசதம்(54) அடித்து ஆட்டமிழந்தார்.

அணியை கடைசிவரை கரைசேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆட்டமிழந்தார். இந்நிலையில், மிக நிதானமாக ஆடிவரும் மணிஷ் பாண்டேவுடன் தற்போது இணைந்துள்ளார் பேர்ஸ்டோ.

இவரும், நிதான ஆட்டத்தையே தொடங்கியுள்ளார். இன்னும் 24 பந்துகளில் 35 ரன்களே எடுக்க வேண்டுமென்ற நிலையில், இவர்கள் இருவரும் நிலைத்து நின்று அணியை கரைசேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிஷ் பாண்டே நிதானமாக ஆடிவரும் நிலையில், பேர்ஸ்டோ இனிவரும் ஓவர்களில் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், சிறப்பாக செயல்பட்டவர் இந்த பேர்ஸ்டோ என்பது குறிப்பிடத்தக்கது.