மதுரை:

மீன்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 6வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

மீனவர்கள் பிடித்து வரும் சூடை, காரல் போன்ற மீன்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள  ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க வேண்டும்

சேதமான படகுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்

உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி,  விசைப்படகு மீனவர்கள் ராமேசுவரத்தில் கடந்த 23-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டம் இன்று 6வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்தில், 700-க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தங்களின் போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாத நிலையில், ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.