சண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் தன்னார்வலராக சமீபத்தில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி சோதனைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில், இந்திய கொரோனா தடுப்பூசியான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை தன்னார்வலராக அனில்விஜ் போட்டுக்கொண்டார்.  கடந்த மாதம் (நவம்பர்) நவம்பர் 20 ஆம் தேதி அவர் சோதனைக்காக தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து,  அம்பலா கான்ட் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விஜ் டிவீட் செய்துள்ளார்.