சினிமா நடிகைகளுக்கு நிகராக பல வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து வருபரவர் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி.

தற்போது கொரோனா லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில் டிடி தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B_hhrlJDNUI/

“கடந்த சில வாரங்களாக நான் இப்படித்தான் இருக்கிறேன். லாக்டவுன் போடப்பட்ட உடன் இது நடந்தது. நான் என்னுடைய வலது கால் முட்டி சரியாகிவிட்டது என நினைத்த நேரத்தில் என்னுடைய இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. அதிக அளவில் வலி இருந்த்து.” என பதிவிட்டுள்ளார் .

மேலும் “எப்போதும் ஒருவர் என்ன கஷ்டத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியாது. அதனை அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். எனக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு நன்றி. என்னை லைவ்வில் வரும்படி அழைக்கும் போது நான் ஏன் முடியாது என கூறினேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்” என டிடி கூறியுளளார்.