ஸ்ரீநகர்: ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இன்று  மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று தொடங்குகிறது. பலத்த பாதுகாப்புடன் இன்று 43 தொகுதிகள் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் மொத்தம் 296 பேர் போட்டியிடுகின்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக பிரிக்கப்பட்ட பின்னர்  முதன்முறையாக தேர்தல் நடத்தப்படுகிறது.   ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி நவம்பர் 28ந்தேதி முதல் டிசம்பர் 9ந்தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. இன்று முதல் வருகிற டிசம்பர் 19ந்தேதி வரை  8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22ந்தேதி நடைபெறும்.

முதல்கட்டமாக  இன்று 43 தொகுதிகள் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காஷ்மீரில் 25  தொகுதிகள் மட்டும்  ஜம்முவில் 18  தொகுதிகள் என மொத்தம் 43 தொகுதிகளுக்கு இன்று காலை முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த 43 தொகுதிகளில் 296 பேர் போட்டியிடுகின்றனர்.  இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.

இந்த  மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், பா.ஜ.க. , காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி மற்றும் சி.பி.ஐ. (எம்.) ஆகியவை உள்பட ஏராளமான சுயேச்சைகளும் களமிறங்கி உள்ளனர்.