ஜம்மு:

என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட தீவிரவாதிகள் எழுந்து, படை வீரர்களையும் பொதுமக்களையும் கொன்றனர்.


ஜம்மு காஷ்மீர் லங்கேட் பகுதியில் உள்ள கான்னன் பாபாகந்த் என்ற இடத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
சிஆர்பிஎஃப் படை வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் சில தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட உடல்களை அப்புறப்படுத்த சிஆர்பிஎஃப் வீரர்கள் அருகில் சென்றனர். அப்போது திடீரென எழுந்து சுட ஆரம்பித்தனர்.

இதில் 4 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர் ஹண்ட்வாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.