டெல்லி:

த்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதனால் நாடு முழுவதும்  1.3 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்று கூறப்படுகிறது.

இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 21 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.

அப்போது, இதற்கு முன் 17 சதவீதம் இருந்த அகவிலைப்படி 21 சதவீதமாக உயர்வதாகவும், . இதன் மூலம் 48 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். இதனால் நடப்பு நிதியாண்டில் அரசுக்குக் கூடுதலாக ரூ.14 ஆயிரத்து 595 கோடி செலவாகும் என்றும்,  ஜனவரி 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.