டில்லி:

குழந்தைகளை வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள உ.பி. மாநில இளம்பெண் வன்கொடுமை மற்றும்,  ஜம்மு – காஷ்மீர் மாநிலம், கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் ஆசிஃபா சிறுமி  வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மேனகா காந்தி,  இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராத வண்ணம் ,  பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்ச கத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஒன்று கூடி சட்ட திருத்தம் உருவாக்கப்பட்டு வருகிறது. அது முடிவு பெற்றதும் சட்டத்துறைக்கு அனுப்பப்படும்.

தற்போது நாடாளுமன்றம் செயல்படாததால் அவசர சட்டம் இயற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ற்கனவே நடைமுறையில் உள்ள போஸ்கோ சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி 12 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்படும்.

இச்சட்டத்திருத்தம் விரைவில் அமலுக்கு வரும் என்றும் கூறினார்.