மாட்ரிட்:

ஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் நடந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

பார்சலோனா மற்றும் அதன் அருகாமை சுற்றுலா கேந்திரமான காம்பிரில்ஸ் ஆகியவற்றில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 120 பேர் காயமடைந்தனர்.

பார்சிலோனாவில் வேன் ஒன்றை கூட்டத்தினுள் செலுத்தியதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது. இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜெர்மன் நாட்டின் 51 வயது பெண் இன்று இறந்தார். இதைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக் உயர்ந்தது.

இச்சம்பவம் நடந்து சில மணி நேரங்கள் கழித்து காம்பிரில்ஸ்சில் இதே போன்ற தாக்குதலை ஒரு கார் மூலம் நடத்தினர். காம்பிரில்ஸ்சில் தாக்குதல் நடத்திய 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.